Friday 16 December 2011

காதல் என தெரிந்தும்...

காதல் என தெரிந்தும்
அதைச் சொல்ல மனம் வரவில்லை
கண்ணில் நீர் குவிந்தும்
அவன் கண் காண மறுக்கவில்லை
என்றும் ஈரமுல்ல நெஞ்சம்
இன்று கண்ணீரால் பாரமாகிப்
போனது ஏன்?
காயமெனத் தெரிந்தும் அவன்
மாய விழிகளை ஏன் தேடுகிறேன்?
பூக்க விரும்புகிறேன்
நாளை வாடப் போகிறேன்
எனத் தெரிந்தும்.
என் வாழ்க்கையில் புள்ளிகளை
மட்டும் வைத்துச் சென்றுவிட்டான்
கோலம் போட மறந்து.
நான் பருகும் நீரில் நீ
தேனிலும் நீ.
என் உயிரிலும் நீ
உடலிலும் நீ
வென்பனியிலும் நீ
என் பணியிலும் நீ
உன் மீது ஏற்பட்ட
காதல் பிணிக்கு
மருந்தாய் வா.
காதலனே! மருந்தாய் வா.
என் கவிதையின் ஒவ்வொரு
வரிகளும் உனக்கு சொந்தம்
கள்வா.!
கவிதையை மட்டும் சொந்தமாக்கிக்
கொண்டாயே என்னை மறந்து
உனை நினைத்து எழுதும் வேலை
தூரத்தில் பாடும் குயில் சத்தம்
சந்தம் மிக்க சத்தம் அது
நீயே எனை அழைப்பது போல
உணர்ந்தேன்...
கடவுளை நம்பாத நான்
இன்று உனக்காக கடவுளை
வேண்டி நிற்கிறேன்
இல்லாத இம்சைகள் தருகிறென்
இறைவனுக்கு.
உன் பொல்லாத பாசத்தை வேண்டி
சகலமும் தெரிந்த சந்திரனுக்கே
சவால் விடுகிறேன்
உனை தினம் தினம் நான்
வருணித்து கவிதை
கூறுவது போல
என்னவனும் என்னை வருணிக்கும்
நாள் வருமென....
எல்லா பெண்களுக்கும் உள்ள
சுகம் தானே.......
என்னவனே நீ தான் என் உலகம்
என்று ஒருபோதும் சொல்லேன்
உன் உலகத்தின் புல்லாக மாட்டேனா?
அனுமதி தருவாயா?
என்றுதான் கேட்கிறேன்...
நீ சோர்வாய் இருந்தால்
தலை சாய்த்துக் கொள்ளவும்
மகிழ்வாய் இருந்தால்
என் மடி சாய்ந்துக்கொள்ளவும்
மழை விழும் தருணத்தில்
உன் நுனிவிரலால் .
புல்லின் பசுமையை.
இயற்கையை
தொடும் வேலை ஏற்படும்
கூச்சத்திற்கு
பெண்மையின் நாணமே சாட்சி...
அத்தகைய புல்லாக
நான் வாழவேண்டும்!
உன் அருகில் வாழும்
அனுமதி கொடு!
நம் அன்பெனும் கூட்டுக்குள்
என் காதலை யாரும்
பறிக்காமல்
அடைகாத்துக்கொள்கிறேன்!!

No comments: