தீபத்தின் வெளிச்சம்
நம் இருளகற்றும் பொழுதுகளில்..
புத்தாடை.. பட்டாசு.. இனிப்போடு..
குட்டிக் குறும்புகள் தித்திப்பு சிரிப்பு சிதறும் நொடிகளில்..
தினம் தினம் நில்லாமல் நகரும்
நாட்களின் வரிசைகதியில்..
சட்டென புது வசந்தமாய் வந்து
புன்முறுவல் சிந்தும்..
பண்டிகை தினங்களின் தருணங்களில் எல்லாம்..
நம் வாழ்வும் உறவும்
அழகடைகிறது இன்னும் இன்னும்..
பிரியம் நிறைந்த அத்தனை இதயங்களுக்கும்
பிரகாச தீப ஒளி தின வாழ்த்துக்கள்…
No comments:
Post a Comment