Thursday 1 December 2011

என்னை போல....


எத்தனையோ முறை
எழுதுகோலை திற‌ந்து
மூடி வைத்தேன்
ஒருமுறை கூட
ஒன்றும் எழுதவில்லை
அந்த வெள்ளை தாளை
கற்பழிக்கும் முயற்சி
இதுவரை என்னால்
இயலவில்லை
இதில் கூட தோற்றுகொண்டிருக்கிறேன்
இரக்கமில்லாத அவளின்
இதயத்தை களவாடும்
முயற்சியை போல‌
எதாவது சாபம் கொடுத்திருப்பாளோ...?!?
மையை மயங்கி போவென...;
கையை அசையாதேயென..;
புத்தியை புலம்புயென;
இப்போது கூட பாருங்கள்
எழுதுகோல் தலைகுனிந்து
ஒழுகுகிறது...?
அவள் முன் நிற்கும்
என்னை போல....

No comments: