Tuesday 6 December 2011

மூன்றெழுத்துக் கவிதை

மூன்றெழுத்துக் கவிதை அன்பு!
என்னை செதுக்கியவரிடமிருந்து எதிர்பார்ப்பது..
வாழ்க்கை எனும் பக்கங்களை நிரப்ப
எனக்கு வேண்டுமிந்தக் கவிதை!
தவறுகள் அனைத்தும் சரியாய்ப் போகும் இந்த
யுகத்தில் நான் சரி என எண்ணும்
சிந்தை மட்டும் தவறாய்ப் போகிறதே!
வண்ணங்கள் யாவும் என் வசம் மாறத்
துடிக்கும் இதயம் சொந்தத்துக்காக
கனவை எல்லாம் தொலைத்துவிட்டதே..
வெளியில் உங்கள் சிரிப்பு
எனக்கு இன்மை பயக்காது.
உள்ளே ஏற்பட்ட காயத்தையும் கண்ணீரையும்
என் கண்ணின் கரு துருவாய் அதைத் தாங்கும்
என் உள்த்தில் புதிய வாழ்வின் கோலம்
நீங்கள் ஏற்படுத்திய கண்ணீரின்
ஈரத்தால் அழிந்து போயிற்று!
பூவாய்ப் பூத்தது தவறா?
நான் மலர்ந்த செடியிடம் இருந்து
என்னைப் பரித்து தினம் தினம் வாட வைக்கிறீர்கள்!

No comments: