Tuesday 6 December 2011

தாய்மை.....


எங்கள் தாய்மையை தாலாட்ட
மன ஏழ்மையே வேண்டாம்
நேசத்தின் நாட்காட்டி
நினைவுகளில் தாலாட்டி
சோகத்தை சுவை மாற்றி
ஊக்கத்தை உணவாக்கி
நோக்கத்தில் நெறிகூட்டி
பாசத்தால் முடிசூடி
பரிவுக்கே வழிகாட்டி
நிகரில்லா சீமாட்டி
ஈரைந்து மாதம்
என்னுடன் பேசி
இறைந்து அல்ல
கரைந்து
உறைந்து போன
வலியில் வந்தேன்
வாரி அணைத்தாள்
உச்சி முகர்ந்தாள்
கொஞ்சி மகிழ்ந்தாள்
வலியை மறந்தாள்
தனிமை துறந்தாள்
இனிமை நிறைந்தாள்
தாயைத் தந்தான் இறைவன்...
தன்னால் எல்லோர்க்கும் இயலாதென்று
தாரம் தந்தான்... இறுதிவரை என்று
தாயே தாரம் என்றான்
அதுவும் போதாதென்று
அன்பைத்தந்தான்
அன்பே...! தாய் என்பதால்
அன்பே...! தான் என்பதால்

No comments: