Tuesday 6 December 2011

பதில் சொல் என் அன்பே!


என்னை அணைக்க
என் உணர்வுகளை உணர
என் கண்ணீரை துடைக்க வந்த
என் வசந்தமே... என்னோடு..
நீதான் என்றும் வேண்டும்
என் உயிருக்கும்...
உணர்வுண்டு... என்று...
உணர்த்திய என் செல்லமே..
நீ மட்டும் போதும் எனக்கு...
தூரம் எதற்குதான்
தடை விதிக்க முடியும்...
நம் அன்பிற்கும்
தூரம் ஒரு தடையா?
எதுவாக இருக்கட்டும்...
தூரமோ...அல்லது துயரமோ...
நீ மட்டும் போதும்...
என்னோடு என்றும்....
இருப்பாயோ வாய்திறந்து
பதில் சொல் என் அன்பே!

No comments: